புதுடில்லி: கொரோனா ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு கட்டணத்தை திரும்ப பெறும் அவகாசத்தை ஒன்பது மாதங்களாக மத்திய அரசு நீட்டித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 21 முதல் ஜூன் 31 வரை நாடு முழுதும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இந்த காலகட்டத்தில் ரயில்களில் பயணிக்க நேரடியாக 'டிக்கெட்' முன்பதிவு செய்தவர்கள் அதை ரத்து செய்து கட்டணத்தை திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டது. அதாவது, பயண தேதியில் இருந்து ஆறு மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்பதிவு டிக்கெட் தொகையை திரும்ப பெறுவதற்கான கால அவகாசத்தை 6 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE