காட்டுமன்னார்கோவில்; லால்பேட்டையில் புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை கட்டடம் பள்ளிக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.இப்பள்ளியில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடம் பழுதடைந்திருந்தது.இதனை, முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் தமீஜூதீன் நினைவு அறக்கட்டளை சார்பில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பித்து, ஹைடெக் வகுப்பறையாக மாற்றப்பட்டது.இக்கட்டடத்தை பள்ளிக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் மாசுமுல்லா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் ராமதாஸ் முன்னிலையில் கட்டடத்தின் சாவி பள்ளி தலைமையாசிரியர் இளங்கோவனிடம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் ஹிலுார் முகமது, முகமது யூசப், முகமது அன்சாரி, நுாருல் அமீன், பத்தஹூத்தீன், மர்ஜீக், முஸ்தபா, நிசார் அகமதுலால்பேட்டை முஸ்லிம் ஜமா அத் செயலாளர் அமானுல்லா, பொருளாளர் அப்துல் ரசீது, பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE