புவனகிரி; காங்., கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் புவனகிரியில் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.தமிழ்நாடு காங்., தலைவர் தலைவர் அழகிரி, கட்சித் தலைமையின் ஒப்புதலுடன் மாநில நிர்வாகிகளை அறிவித்தார். புதிதாக பொறுப்பேற்ற மாநில பொதுச் செயலாளர் சேரன், துணைத் தலைவர் மணிரத்தினம், செயலாளர் சித்தார்த்தன், மாவட்ட தலைவர் செந்தில்நாதன் ஆகியோர் புவனகிரியில் உள்ள காந்தி, காமராஜர் மற்றும் ராஜிவ் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். முன்னதாக நிர்வாகிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, முன்னாள் சேர்மன் கோவி பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் விநாயகம் வரவேற்றார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் பேராசிரியர் செந்தில்வேலன், விவசாய பிரிவு தலைவர் குமார், வர்த்தகப் பிரிவு பொருளாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE