விருத்தாசலம்; விருத்தாசலத்தில் சேதமடைந்த உளுந்து பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி, ஜனநாயக விவசாயிகள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்டச் செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். ராமர், ராஜசேகர், ஜனார்தனன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டதில், விருத்தாசலம் பகுதியில் மழையால் சேதமடைந்த உளுந்து பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். புதிதாக அமல்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்ட மசோதாக்களை வாபஸ் பெற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE