பண்ருட்டி; பண்ருட்டியில் பா.ம.க., சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.நகராட்சி அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர்கள் வைத்தியலிங்கம், முருகவேல், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஜெகன், ஆறுமுகம், நெடுஞ்செழியன், முன்னாள் ஒன்றிய சேர்மன் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். போராட்டத்திற்குப் பின், நகராட்சி கமிஷனர் சிவசங்கரனிடம் மனு அளித்தனர்.நகர செயலாளர்கள் வினோத், தமிழரசன், ஐயனார், ஒன்றிய செயலாளர்கள் அரிராமன், பன்னீர், தாமரைக்கண்ணன் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE