வடலுார்; விவசாய கிணற்றில் விழுந்த சிறுவன், நீரில் மூழ்கி இறந்தார்.வடலுார், பார்வதிபுரம், வடக்கு தெருவைச் சேர்ந்தவர், ரவிசங்கர் மகன், ராஜ், 8; அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தவர்.இவரை கடந்த இரு தினங்களாக காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், நேற்று முன்தினம் வடலுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை, சிறுவனின் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் இருந்து சடலமாக மீட்டனர். குளிக்கச் செல்வதாக நண்பர்களிடம் கூறிச் சென்ற சிறுவன் ராஜ், கிணற்றில் விழுந்து இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE