விருத்தாசலம்; வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, விருத்தாசலத்தில் பா.ம.க., சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.விருத்தாசலம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத்திற்கு, மாவட்டச் செயலர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.துணை செயலாளர்கள் கருணாநிதி, செந்தில்ராஜா, வன்னியர் சங்கத் தலைவர் சிங்காரவேல், மாவட்ட கவுன்சிலர் தமிழரசி, மாநில மகளிரணி செயலர் சிலம்புச்செல்வி, மகளிரணி துணைச் செயலர் ஆனந்தி, துணைத் தலைவர் கலைமதி, முன்னாள் நகராட்சி சேர்மன் முருகன், முன்னாள் ஒன்றிய சேர்மன் செல்வராஜ், நகர செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.பசுமைத் தாயக மாவட்ட அமைப்பாளர் ஆசா வெங்கடேசன், வன்னியர் சங்க துணைச் செயலாளர் சக்கரவர்த்தி, நகர தலைவர் ஏழுமலை உட்பட விருத்தாசலம், திட்டக்குடி, புவனகிரி ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.முன்னதாக, பாலக்கரையில் இருந்து நகராட்சி அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர்.போராட்டத்தைத் தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாண்டுவிடம், வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி மனு கொடுக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE