கச்சிராயபாளையம்; கச்சிராயபாளையம் அருகே ஓடை நீரில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டியை தீவிரமாக தேடிவருகின்றன்ர.கச்சிராயபாளையம் அடுத்த வடக்கனந்தல் பகுதியை சேர்ந்தவர் ் பச்சையம்மாள்,76; இவர்களுக்குசொந்தமாக அம்மாபேட்டை -கானாங்காடு சாலை அருகில் விவசாய நிலம் உள்ளது. நேற்று காலை 9 மணியளவில் பச்சையம்மாள் தனது மகள் வளர்மதியுடன் தனது நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அம்மாபேட்டை அருகில்உள்ள பத்துகாணி ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை வழியாக ஓடையை கடக்க முயன்றுள்ளார்.அப்போது ஓடை நீரில் மூதாட்டி இழுத்து செல்லப்பட்டுள்ளார்.அருகிலிருந்த மகள் வளர்மதி தாயை காப்பாற்றும்படி கூச்சலிட்டார்.உடன் அக்கம்பக்கத்தினர் ஓடை நீரில் தேடி பார்த்தும் மூதாட்டியை காணவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தொடர்ந்துமூதாட்டி பச்சையம்மாளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE