திண்டிவனம் - திண்டிவனம் ஜெயபுரம் சந்திப்பில் மாடுகள் சாலையில் சுற்றித் திரிவதால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.புதுச்சேரி--திண்டிவனம் பைபாஸ், போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. இச்சாலையில், திண்டிவனம் ஜெயபுரம் சந்திப்பில், மாடுகள் சுற்றித் திரிகின்றன. பகலில் மட்டுமின்றி, இரவிலும் சாலை நடுவில் மாடுகள் அமர்ந்து ஓய்வெடுக்கின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.மாடுகளின் உரிமையாளர்களை போலீசார் எச்சரித்தும், அதே நிலை தான் நீடித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில், மட்டும் 10க்கும் மேற்பட்டோர், சாலையில் படுத்து கிடக்கும் மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.எனவே, சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE