விழுப்புரம் - விழுப்புரத்தில் கடையின் முன் நிறுத்தியிருந்த மொபட்டை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.விழுப்புரம் மேற்கு அய்யனார் குளம் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், 32; அரசு மருத்துவமனை எதிரில் உள்ள இரும்பு கடையில், மேலாளராக பணிபுரிந்து வருகின்றார். இவர், கடந்த மாதம் 14ம் தனது மொபட்டை இரும்பு கடை முன் நிறுத்தியிருந்தார். பின், மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, மொபட்டை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.புகாரின்பேரில், விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி வழக்கு பதிந்து விசாரிக்கின்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE