திருவெண்ணெய்நல்லுார் - லாட்டரி விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் புவனேஸ்வரன், 35; பிரவுசிங் சென்டர் நடத்தி வருகிறார். புவனேஸ்வரன் அவரது பிரவுசிங் சென்டர் மூலம் திருவெண்ணெய்நல்லுார், திருக்கோவிலுார், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்களுக்கு கம்ப்யூட்டரில் லாட்டரி சீட்டை பிரின்ட் அவுட் எடுத்து விற்பனை செய்து வந்தார்.தகவலறிந்த விழுப்புரம் தனிப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புவனேஸ்வரன், 35; கைது செய்து அவரிடமிருந்து லேப்டாப், ஜெராக்ஸ் மிஷின், மற்றும் நான்கு செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஆனத்துார் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம், 72; என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE