வானூர் - புதுச்சேரியில் இருந்து தமிழகப்பகுதிக்கு கள்ளச்சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரியில் இருந்து வானுார் வழியாக தமிழகப்பகுதிக்கு கள்ளச் சாராயம் கடத்தப்படுவதாக வானுார் போலீசாருக்கு நேற்று மதியம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் மயிலம் ரோடு, ரங்கநாதபுரம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். பைக்கில் சாக்கு மூட்டையில் கள்ளச்சாராயம் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.விசாரணையில் அவர், புதுச்சேரி சந்தைபுதுக்குப்பத்தை சேர்ந்த சாரதி, 35; என தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE