விழுப்புரம்: வழக்கறிஞர் கொலை வழக்கில், ஜாமீனில் வந்து 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆறுமுகம், கடந்த 2006ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், 9 பேரை விழுப்புரம் தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதில், ஜாமீனில் வந்த கண்டம்பாக்கத்தை சேர்ந்த ராயர் மகன் இளையராஜா,38; என்பவர், கடந்த 2009ம் ஆண்டில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார்.கடந்த சில தினங்களுக்கு முன் கண்டம்பாக்கம் வந்த இளையராஜாவை, நேற்று விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.விசாரித்ததில், அவர், பெங்களூருவில் கொத்தனார் வேலை செய்து கொண்டு, அங்கேயே திருமணம் செய்து வசித்து வருவது தெரிய வந்தது. போலீசார் அவரை, விழுப்புரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் 1ல் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE