மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுாரில் வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் பைக்கில் சுற்றித்திரிந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். இதில் அவர்கள் வந்த பைக்கில் 500 கிராம் கஞ்சா பாக்கெட் இருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் குப்புசாமி,21; பவுஞ்சிப்பட்டை சேர்ந்த வீராசாமி மகன் சுபாஷ்,21; எனத்தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து, பைக் மற்றும் கஞ்சா பாக்கெட்டை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE