விளக்கு எரியுமா?புதுச்சேரி காந்தி நகர் 4-வது குறுக்கு தெரு வேளாண் தோட்டம் எதிரில் தெரு விளக்கு எரியவில்லை.மோகன், காந்தி நகர்.குண்டும் குழியுமான சாலைரெட்டியார்பாளையம் தபால் நிலையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்றுள்ளதால் தினமும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கணேஷ், ரெட்டியார்பாளையம்.வழிந்தோடும் கழிவுநீர்முதலியார்பேட்டை தீரன் சந்தியமூர்த்தி நகரில் கழிவுநீர் சாலையில் ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.முருகன், முதலியார்பேட்டை.நாய்களால் தொல்லைசாரம் குயவர்பாளையம் செல்லபெருமாள் கோவில் வீதியில் நாய்த் தொல்லை உச்சக்கட்டத்தில் உள்ளது.லட்சுமணன், சாரம்.விழும் நிலையில் சிலைகொக்குபார்க் பூங்காவில் அன்னை தெரசா சிலை விழும் நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றது. சிலையை பாதுகாப்பான நிலையில் மீண்டும் நிறுவ வேண்டும்.யுவராஜன், வினோபா நகர்.பாம்புகளால் அச்சம்புதுச்சேரி ரெயின்போ நகர் 3-வது குறுக்கு தெருவில் காலிமனைகள் புதர்மண்டி நச்சுபாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவற்றை அகற்ற உழவர்கரை நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.திலகவதி, புதுச்சேரி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE