கால்நடை ஆய்வாளர் படுகாயம்கடம்பத்துார்: சென்னை, பெரம்பூரைச் சேர்ந்தவர் பழனி, 41. பேரம்பாக்கம் கால்நடை மருத்துவமனையில் கால்நடை ஆய்வாளராக பணிபுரிந்து வரும் இவர், நேற்று முன்தினம் காலை, கடம்பத்துார் - பேரம்பாக்கம் சாலையில், 'ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், கீழே விழுந்து படுகாயமடைந்த பழனி, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை பெற்று வருகிறார்.சூதாட்டம் ஆடிய முதியவர் கைதுவெள்ளவேடு: திருமழிசை பஸ் ஸ்டாண்ட் பகுதியில், வெள்ளவேடு போலீசார், ரோந்து பணி மேற்கொண்டனர். அங்கு, காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தோரை பிடிக்க முயன்ற போது, அனைவரும் தப்பினர்.திருமழிசையைச் சேர்ந்த பாபு, 63, போலீசாரிடம் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 56 சீட்டுகள், 206 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE