கும்மிடிப்பூண்டி - மாதர்பாக்கம் அருகே, நேமளூர், என்.எஸ்.நகர் பகுதியில் வசித்தவர் மணிகண்டன், 24. அல்லிப்பூக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமன், 26. இருவரும், சூரவாரிகண்டிகை கிராமத்தில் உள்ள தனியார் அட்டை தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர்.நேற்று முன்தினம் இரவு, இருவரும் வேலை முடிந்து, 'ஹீரோ ஸ்பிளன்டர்' பைக்கில், வீடு திரும்பி கொண்டிருந்தனர்.பைக்கை, சுமன் ஓட்டி சென்றார். கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில், சிறுவாடா சந்திப்பு அருகே, லாரி ஒன்றை கடக்க முயன்றபோது, நிலை தடுமாறி இருவரும் விழுந்தனர்.லாரியின் டயரில் சிக்கி, மணிகண்டன் இறந்தார். சிறு காயங்களுடன், சுமன் உயிர் தப்பினார். லாரி நிற்காமல் சென்றது. பாதிரிவேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE