காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மாவட்ட டிஜிட்டல் போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் சங்கத்தின், பொதுக்குழு கூட்டம், காஞ்சிபுரத்தில், நேற்று முன்தினம் நடந்தது.இதில்,காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், செய்யூர், செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான புகைப்பட கலைஞர்கள் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், புகைப்பட கலைஞர்களுக்கு என நல வாரியம் அமைக்க வேண்டும். சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சிறப்பாக செயல்பட்ட புகைப்பட கலைஞர்களுக்கு, இந்நிகழ்வில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE