பெரும்பாக்கம் - ஒட்டியம்பாக்கத்தில், பெற்றோருடன் கோபித்து, வீட்டில் இருந்து மாயமான, எட்டாம் வகுப்பு சிறுமியை, போலீசார், கோவை பஸ் நிலையத்தில் மீட்டனர்.சென்னை, ஒட்டியம்பாக்கத்தை சேர்ந்தவர் சண்முகராஜா. இவரது, 13 வயது மகள், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மொபைல் போனில், நண்பர்களுடன் அடிக்கடி பேசியதால், பெற்றோர் கண்டித்துள்ளனர்.கடந்த, 3ம் தேதி, இருசக்கர வாகனத்தில், வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமி, வாகனத்தை கோயம்பேடு பஸ் நிலையத்தில் விட்டு மாயமானார்.பெரும்பாக்கம் போலீசார், அவர் கொண்டு சென்ற மொபைல் போன் சிக்னலை வைத்து தேடினர். கோவையில், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் என, மாறி மாறி சிக்னல் காட்டியது.நேற்று முன்தினம் இரவு, கோவை பஸ் நிலையத்தில் வைத்து, போலீசார், சிறுமியை மீட்டனர். நேற்று, பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து, சிறுமிக்கு தகுந்த மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.பின், பெற்றோரை வரவழைத்த போலீசார், அவர்களுடன் சிறுமியை அனுப்பி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE