மதுரை : மதுரையில் அரசு போக்குவரத்து கழக கிளைகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை அமைச்சர் முன்னிலையில் பேசி முடிக்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கு அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைக்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான பணப் பலன்கள் டிச.,21ல் அரசு உத்தரவிட்டும் இதுவரை பட்டுவாடா செய்யவில்லை. இதை உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப் பட்டன.
மதுரையில் 14 கிளைகளிலும் தொ.மு.ச., பணியாளர் சம்மேளனம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஏ.எல்.எப்., உட்பட 9 சங்கங்கள் பங்கேற்றன. நிர்வாகிகள் அல்போன்ஸ், சம்பத், பிச்சை, செல்லத்துரை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE