சென்னிமலை: ஈரோடு மாவட்டத்தில், இரண்டு நாட்களாக தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் பழனிசாமி, பெருந்துறையில் நேற்றிரவு நிறைவு செய்தார். அங்கு நடந்த கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: ஸ்டாலின் ஊழல் பற்றி பேசுகிறார். தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது பல ஊழல் புகார் உள்ளது (வழக்குகளை பட்டியலிட்டார்). நான் முதல்வரானது எப்படி என்று, ஸ்டாலின் ஊர் ஊராக கூறி வருகிறார். மிஸ்டர் ஸ்டாலின், அண்ணாதுரை இறந்தபோது உங்கள் தந்தை கருணாநிதி, எப்படி முதல்வரானார் என நாடே அறியும். அப்போது முதல்வராக வரவேண்டியவர் நெடுஞ்செழியன். இதை மறந்து பேச வேண்டாம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE