மொடக்குறிச்சி: போர்வெல் தண்ணீரில், அமிலத்தன்மை உள்ளதால், காவிரி குடிநீர் வழங்கக்கோரி, மொடக்குறிச்சி யூனியன், நஞ்சை ஊத்துக்குளி பஞ்., சபரி கார்டன், டீச்சர்ஸ் காலனி மக்கள், நஞ்சை ஊத்துக்குளி நால்ரோடு பஸ் நிறுத்தத்தில், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சபரி கார்டன், டீச்சர்ஸ் காலனி பகுதியில், 70 குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்களுக்கு வினியோகித்த போர்வெல் குடிநீரில், அமிலத்தன்மை உள்ளது. இதனால், குடிநீருக்காக நாள்தோறும் இரண்டு கி.மீ., தூரம் செல்லும், அவல நிலை நீடிக்கிறது. இப்பகுதி வழியாக காவிரி குடிநீர் குழாய் சென்றாலும், எங்களுக்கு கிடைப்பதில்லை. இதுகுறித்து பஞ்., தலைவர் சுகுணாதேவியிடம் தெரிவித்தால், அவரின் கணவர் சிதம்பரம் எங்களை மிரட்டுகிறார். காவிரி குடிநீர் வழங்க போதிய நிதி இல்லை என்கின்றனர். பஞ்சாயத்துக்கு கடந்த ஆண்டு, 99 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காவிரி குடிநீர் வழங்க, யூனியன், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, மறியல் போராட்டம் நடந்தாலும், பஞ்., தலைவர், யூனியன் அதிகாரிகள் வரவில்லை. மொடக்குறிச்சி போலீசார் சமாதானம் பேசி, கலைந்து போக செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE