கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை முதல் மாவட்டம் முழுவதும் லேசான மழை பெய்தது. இரவு முழுவதும் மழை பெய்த நிலையில் நேற்று காலை, 7:30 மணிக்கு நின்றது. பின், மாலையில் லேசான மழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக ஊத்தங்கரையில், 52.8 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதேபோல், போச்சம்பள்ளி, 49.2, பாரூர், 46, பெனுகொண்டாபுரம், 44.4, நெடுங்கல், 43.2, ராயக்கோட்டை, 30, சூளகிரி, 32, ஓசூர், 28.2, தேன்கனிக்கோட்டை, 27.4, கிருஷ்ணகிரி, 22.2, அஞ்செட்டி, 16.6, தளி, 10 என, மாவட்டம் முழுவதும், 402 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE