மதுரை : சென்னை -மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஜன., 10 முதல் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் பயணிகளின் போதிய ஆதரவு இல்லாததாக கூறி ஜன., 4 முதல் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தினர். அதை ஏற்று மீண்டும் இயக்க நிர்வாகம் அனுமதித்துள்ளது.வியாழன் தவிர மற்றநாட்களில் இந்த ரயில் இயக்கப்படும்.
சென்னை எழும்பூரில் காலை 6:00 மணிக்கு புறப்படும் தேஜஸ் சிறப்பு ரயில் (02613) மதியம் 12:15 மணிக்கு மதுரை வரும். மறுமார்க்கத்தில் மதுரையில் மதியம் 3:00 மணிக்கு புறப்படும் ரயில்(02614) இரவு 9:15 மணிக்குசென்னை எழும்பூர் செல்லும். திருச்சி, கொடைரோடு ஸ்டேஷன்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில் கொடைரோடு ஸ்டேஷனுக்கு பதில் திண்டுக்கல் மற்றும் சென்னை தாம்பரத்தில் இந்த ரயில் நின்றுசெல்ல நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE