எலச்சிபாளையம்: பெரியமணலி குறுவள மையத்தில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பாக, எலச்சிபாளையம் வட்டாரம், பெரியமணலி குறுவள மையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் கலைச்செல்வி தலைமை வகித்தார். பள்ளி வளர்ச்சி திட்டத்தில் பெற்றோர் பங்கு, பள்ளி மேம்பாட்டு திட்டம், சமூக தணிக்கை, உள்கட்டமைப்பு, குழந்தைகளின் உரிமைகள், சமூக பாதுகாப்பு, பாலின சமத்துவம், பேரிடர் மேலாண்மை, கல்வியில் புதுமை, தர கண்காணிப்பு முறைகள் உள்ளிட்டவை குறித்து, கருத்தாளர் தமிழ்ச்செல்வி எடுத்துரைத்தார்.
* பள்ளிபாளைம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு உறுப்பினர்கள் கூட்டம், தலைமை ஆசிரியர் கருப்பண்ணன் தலைமையில் நடந்தது. பள்ளி வளர்ச்சி, மேம்பாட்டு திட்டம், சுகாதாரம், கற்பித்தல், மாணவர் சேர்க்கை போன்றவை குறித்து ஆலேசானை செய்யப்பட்டது. மேலும், காணொலி மூலம் உறுப்பினர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE