பள்ளிபாளையம்: தொடர் மழையால், பள்ளிபாளையத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர் சாய்ந்துள்ளது. மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் நெல்சாகுபடி செய்வதற்கு, கடந்த ஆகஸ்டில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி, பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் மோளகவுண்டம்பாளையம், சமயசங்கிலி, களியனூர், எலந்தகுட்டை, ஆலாம்பாளையம், தெற்குபாளையம் மற்றும் பல பகுதிகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. சாகுபடிக்கு போதுமான தண்ணீர் கிடைத்தது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை தொடங்கி விடும். இந்நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக மழை பெய்து வருவதால், நெற்கதிர் சாய்ந்துள்ளது. இதுகுறித்து, பள்ளிபாளையம் விவசாயிகள் கூறுகையில், 'தொடர்ந்து மழை பெய்து, நெற்பயிர் சாய்ந்த நிலையில் காணப்பட்டால் நெல்மணிகள் பாதிப்படையும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE