ராசிபுரம்: ராசிபுரம் ஒன்றியத்தில், ஜல்லிக் கற்களாக மாறிய சாலையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ராசிபுரம் ஒன்றியத்தில், பட்டணம் முனியப்பன்பாளையத்திலிருந்து பூசாரிபாளையம் வழியாக காக்காவேரி செல்ல ஊராட்சி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாகத்தான் கிராமத்து மக்கள் நாமகிரிப்பேட்டை, ஆத்தூர் செல்கின்றனர். அதுமட்டுமன்றி இப்பகுதியில் உள்ள அரசு பள்ளி, தனியார் கல்லூரிகள், பள்ளிகளுக்கு செல்ல மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த சாலை, மழை காலங்களில் சேதமடைய தொடங்கியது. தற்போது, ஜல்லிக் கற்களாக மாறிவிட்டது. மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று போக்குவரத்தை மேலும் சிரமமாக்குகிறது. எனவே, இவ்வழியாக வாகனங்கள் மிகவும் மெதுவாக செல்கின்றன. இதனால், காலை மாலை நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சாலையை சீரமைக்க வேண்டும் அல்லது புதிதாக அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE