கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். அலுவலக உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியம், கிராம உதவியாளர்களுக்கு வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம், 7,850 ரூபாய் அளிக்க வேண்டும். பொங்கல் போனஸ், 7,500 ரூபாய் வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், துணைத் தலைவர் அஞ்சலை, செயலாளர் தனலட்சுமி, இணை செயலாளர் குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பிபனர் அரசகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE