கரூர்: தேங்கி கிடக்கும் குப்பையை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். கரூர் அருகே, வாங்கல் சாலையில், பொது மக்கள் குப்பை கொட்டுகின்றனர். ஆனால், சாலையில் தேங்கிய குப்பை, அகற்றப்படாமல் உள்ளது. இதனால், காற்று பலமாக வீசும் போது, குப்பை பறந்த வண்ணம் உள்ளது. மேலும், அந்த பகுதியில் உலா வரும் நாய்கள், குப்பையை சாலை நடுவே இழுத்து போட்டு விடுகிறது. எனவே, தள்ளுவண்டிகள் மூலம் தேங்கிய குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE