நாமக்கல்: கேரளா மற்றும் வட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை, 25 காசு குறைக்கப்பட்டு, 485 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனை கூட்டம், தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. கடந்த ஒரு மாதமாக முட்டை விற்பனை நல்ல முறையில் இருந்ததால் அதன் விலையும் சராசரியாக உயர்ந்து வந்தது. ஜன., 4லிருந்து அதிகபட்சமாக முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, 510 காசுகளாக விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையில் கேரளா மற்றும் வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பறவை காய்ச்சலால் மக்களிடையே ஒருவித தயக்கம் காணப்படுகிறது. இதனால் முட்டை விலையை சற்று குறைக்கலாம் என பண்ணையாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து, 25 காசுகள் குறைக்கப்பட்டு முட்டை விலை, 510 காசிலிருந்து, 485 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் என, பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம்(காசுகளில்): சென்னை, 510, ஐதராபாத், 495, விஜயவாடா, 526, மைசூரு, 505, பெங்களூரு, 505, கோல்கட்டா, 571, டில்லி, 555. பல்லடத்தில் நடந்த தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ, 92 ரூபாய், முட்டை கோழி, 52 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE