கோவை: இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட, 'கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, நாடு முழுதும், தடுப்பூசிக்கான ஒத்திகை நடந்து வருகிறது. தமிழகத்தில், ஏற்கனவே, 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. இந்நிலையில் மாநிலம் முழுதும், 190 இடங்களில், இன்று (ஜன.,08) ஒத்திகை நடைபெறுகிறது. கோவையில் அரசு மருத்துவமனையிலும் ஒத்திகை நடந்தது.
பின்னர் மருத்துவமனை டீன் கூறியதாவது: தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்ததும், ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி போடப்படும். கோவை அரசு மருத்துவமனையில் 3,316 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE