ஊட்டி: வடகிழக்கு பருவ மழை இறுதி கட்டத்தில் தீவிரமடைந்து வருகிறது. இன்று முதல் நான்கு நாட்கள் மாநில முழுவதும் மழை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரியில் கடந்த மூன்று நாட்களாக நகர் மற்றும் ரூரல் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கடும் மேக மூட்டம் நிலவுகிறது. இன்று காலை முதல் பரவலாக சாரல் மழை பெய்வதுடன், கடும் குளிர் நிலவுகிறது.
இன்று காலை, 8.00 மணி நிலவரப்படி,
குன்னூர் - 44 மி.மீ.,
பர்லியார் உள்ளிட்ட ரூரல் பகுதிகளில், 30 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
சராசரி மழை அளவு 9.52 மி. மீ.,
குன்னூர் - பர்லியார் சாலை, மஞ்சூர் - கோவை சாலை, கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மற்றும் கிராமப்புற சாலைகளில் கடும் மேக மூட்டம் நிலவுகிறது. மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE