பெங்களூரு: எலச்சனஹள்ளி - அஞ்சனாபுரா வரையிலான, மெட்ரோ போக்குவரத்து, வரும், 14ல் துவக்கப்படுகிறது. பெங்களூரின் எலச்சனஹள்ளி - அஞ்சனாபுரா இடையே, 6.29 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 500 கோடி ரூபாய் செலவிலான, இப்பாதையை, மத்திய நகர அபிவிருத்தித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங்புரி, முதல்வர் எடியூரப்பா, வரும், 14ல் துவக்கி வைக்கின்றனர். வரும், 15 முதல் வர்த்தக போக்குவரத்து துவங்கப்படுகிறது. இப்பாதையில், கோன்னகுன்டே கிராஸ், கிருஷ்ண லீலா பூங்கா, வாஜரஹள்ளி, தலகட்டபுரா, அஞ்சனாபுரா டவுன் ஷிப் என, ஐந்து மெட்ரோ ரயில் நிலையங்கள் இருக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE