நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் வெளிப்பாளையம் நாகதோப்பை சேர்ந்த பெண் ஒருவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு நாகை காமராஜர் நகர் பகுதியில் உள்ள அவரது சகோதரி வீட்டில் தங்குவதற்கு அந்த பெண் சென்றுள்ளார். அப்போது திடீரென அவ்வழியே வந்த இரண்டு இளைஞர்கள் வாயை பொத்தி அருகே இருந்த காமாட்சி அம்மன் கோவிலுக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினர். 9 மணியில் இருந்து இரவு 2 மணி வரை அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த இரண்டு பேர், பின்னர் தப்பிச் ஓடினர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பெண், நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பெண்ணின் சகோதரி வீடு காமராஜ் நகரில் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வெளிப்பாளையம் போலீசார், நாகை வண்டிபேட்டை பகுதியை சேர்ந்த அருண்ராஜ், அக்கரைகுளம் பகுதியை சேர்ந்த ஆனந்த் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள், பலாத்கார சம்பவம் பற்றி புகார் கூறக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளதால், போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE