பாட்னா :“கொரோனா வைரசுக்கான முதல் தடுப்பூசியை, பிரதமர் நரேந்திர மோடி செலுத்தினால் மட்டுமே, நான் தடுப்பூசியை செலுத்திக்கொள்வேன்,” என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேஜ் பிரதாப் யாதவ் கூறியுள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகள் மீது சந்தேகம் எழுப்பும் விதமாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனும், பீஹார் எம்.எல்.ஏ.,வுமான தேஜ் பிரதாப் யாதவ், ஒரு நிபந்தனையை, பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்வைத்துள்ளார்.
![]()
|
இது குறித்து, அவர் கூறியதாவது:கொரோனா வைரசுக்கான முதல் தடுப்பூசியை, பிரதமர் நரேந்திர மோடி செலுத்திக் கொள்ள வேண்டும். அதை அவர் செய்தால் மட்டுமே, நான் தடுப்பூசியை செலுத்திக்கொள்வேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE