கடலுார், : கடலுார், முதுநகர், செல்லங்குப்பம், கைத்தறி துணிநுால் துறை இணை இயக்குனர் அலுவலகம் அருகே கைத்தறி நெசவு பாவு பட்டறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டச் செயலாளர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., மாநில துணைத் தலைவர் கருப்பையன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.மாவட்டத் தலைவர் ஆளவந்தார், பொருளாளர் தயாளன், துணைத் தலைவர்கள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, கணேசன், இணைச் செயலாளர்கள் குமார், பன்னீர்செல்வம், பஞ்சநாதன், சங்கர், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், புயல், மழையால் பாதித்த கைத்தறி மற்றும் பெடல் தறி தனியாரிடம் பணிபுரியும் நெசவாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை மாதம் தோறும் காலம் கடத்தாமல் வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE