திண்டிவனம், : திண்டிவனம் ரயில்வே தரைப்பாலத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் சிக்கிய மாட்டு வண்டியை பொது மக்கள் மீட்டனர்.
திண்டிவனம் பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக, அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகிறது. கிடங்கல்-1 பகுதியில் உள்ள ஏரி நிரம்பி வழிந்து உபரி நீர் ஓடை வழியாக வெளியேறி பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள ரயில்வே தரைப்பாலம் வழியாக வெள்ளம் போல் பாய்ந்து ஓடுகிறது. இதன் காரணமாக, அவ்வழியாக வாகனங்கள் செல்வது சிக்கல் ஏற்பட்டு உள்ளது. நேற்று காலை கிடங்கல்-1 அடுத்த கோட்டைமேடு பகுதியில் இருந்து முருங்கப்பாக்கத்தை சேர்ந்த மனோகர், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், இரண்டு மாட்டு வண்டிகளில், கட்டட இடிபாடு கழிவுகளை ஏற்றிக்கொண்டு தரைப்பாலத்தை கடக்க முயன்றனர்.
அப்போது, திடீரென மனோகரின் வண்டிமாடு, தண்ணீரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், கால்இடறி பள்ளத்தில் சரிந்தது.அதனைக் கண்ட அப்பகுதி மக்கள், வண்டி மாடு முழுமையாக கவிழ்வதற்குள், ஓடிச்சென்று, பாதுகாப்பாக மீட்டு, வெளியில் கொண்டு வந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE