ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் வெற்றி வீரன் தலைமை தாங்கினார்.நிர்வாகிகள் நமச்சிவாயம், குமார் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பிரகாஷ் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், சுவர் இடிந்து விழுந்த குடிசை வீடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, துணை தாசில்தார் சேகரிடம் மனுக்களை வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE