கடலுார் : முதுநகரில் இருந்து வசந்தராயன்பாளையம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
கடலுார், முதுநகரில் இருந்து வசந்தராயன்பாளையம் வழியாக புருகிஸ்பேட்டை, கேப்பர்மலை வரை செல்லும் சாலை உள்ளது. சுற்றியுள்ள கிராம மக்கள் அன்றாட தேவைக்கு முதுநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர்.இந்த சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.நீண்ட நாட்களாக சீரமைக்காமல் உள்ளதால், இவ்வழியே செல்லும் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.எனவே, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE