மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் கடை வீதியில் வடிகால் வாய்கால் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
கடலுார் - சேலம் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி மந்தாரக்குப்பம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் முடிவடைந்து குறவன்குப்பம் முதல் ரோமாபுரி வரை 5 கி.மீ., துாரத்திற்கு வடிகால் வசதியுடன் நான்கு வழிச்சாலைப் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மந்தாரக்குப்பம் கடைவீதியில் வடிகால் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குவதுடன் சாலையும் சேதமாகி வருகிறது. இதனால், வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதியில் நிறுத்தப்பட்ட வடிகால் வாய்கால் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE