திருக்கோவிலுார், : பைக்கில் சென்றவர் தனியார் பஸ் மோதி இறந்தார்.
திருக்கோவிலுார் அடுத்த சாங்கியம் காலனியைச் சேர்ந்தவர் குமார் மகன் சந்திரசேகர்,23; இவர் மணலுார்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வீட்டிற்கு பைக்கில் புறப்பட்டார். சாங்கியம் முருகன் கோவில் அருகே சென்றபோது, பின்னால் வந்த தனியார் பஸ், பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சந்திரசேகரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
மணலுார்பேட்டை போலீசார் தனியார் பஸ் டிரைவர், மொடையூரைச் சேர்ந்த செல்வராஜ், 35; மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE