திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், 'கோவிட் - -19' தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நேற்று நடந்தது.இதை பார்வையிட்ட பின், கலெக்டர் பொன்னையா கூறியதாவது:'கொரோனா' வைரஸ் தடுப்பு ஊசி, போடும் முகாம் தற்போது, மாவட்டம் முழுதும் நடந்து வருகிறது. மாவட்டத்தில், 10 இடங்களில், 'கோவிட் --- 19' தடுப்பூசி ஒத்திகை முகாம் நடைபெற்று வருகிறது.முதல்கட்டமாக, செவிலியர், மருத்துவர்கள் ஆகியோருக்கு, தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.உடன், மருத்துவக்கல்லுாரி முதல்வர் அரசி, டி.எஸ்.பி., துரைப்பாண்டியன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE