கிணற்றில் மூழ்கி விவசாயி பலி
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த, ஜமீன் எண்டத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர், மகாதேவன் 55. இவர், நேற்று முன்தினம், வீட்டில் இருந்து அப்பகுதி மேய்ச்சல் நிலத்திற்கு, தன் ஆடுகளை மேய்க்க ஓட்டி சென்றுள்ளார்.அன்று இரவாகியும், மகாதேவன் வீடு திரும்பாததை அடுத்து, அவரது குடும்பத்தினர் தேடினர். இந்நிலையில், மகாதேவன் உடுத்தி இருந்த ஆடைகள் மற்றும் அவரது குடை, அப்பகுதி கிணற்றின் கரை மீது இருந்ததை அப்பகுதியினர் நேற்று காலை கண்டனர்.கிணற்று படியில் நின்று குளிக்க முயன்றபோது, மகாதேவன் தவறி விழுந்து கிணற்று நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என, கருதினர்.மதுராந்தகம் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி, அவரை சடலமாக மீட்டனர். இதுகுறித்து, மதுராந்தகம் போலீசார் விசாரிக்கின்றனர்.சாராயம் விற்ற பெண்கள் கைது
கூவத்துார்: செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துார், பழைய காலனி பகுதியில், தொடர்ந்து, கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.கூவத்துார் போலீசார், நேற்று முன்தினம், சோதனை நடத்தியபோது, இப்பகுதி மாரியப்பன் மனைவி, முத்துலட்சுமி, 50, ஏழுமலை மனைவி, நாகு, 50, ஆகியோர், கள்ளச்சாராயம் விற்று, பிடிபட்டனர். போலீசார், அவர்களை கைது செய்து, தலா, 35 லிட்டர் சாராய கேன்களை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE