கோவை:பொங்கல் பண்டிகை நெரிசலை சமாளிக்க ஏதுவாக, கொடிசியா வளாகத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படுகிறது.வரும், 14ம் தேதி பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம். இதனால் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, கோவை கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், கொடிசியா வளாகத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படுகிறது. வரும், 12ம் தேதி முதல், 14ம் தேதி வரை சேலம் மற்றும் சேலம் மார்க்கமாகவும், திருச்சி மற்றும் திருச்சி மார்க்கமாகவும் செல்லும் வழித்தட பஸ்கள், இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படுகின்றன.நிழற்குடை, குடிநீர் வசதி, மொபைல் கழிவறை வசதிகள் தற்காலிகமாக ஏற்படுத்தப்படவுள்ளதாக, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE