முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே பொந்தம்புளி- சித்திரங்குடி சாலை வசதியில்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
முதுகுளத்துார் அருகே பொந்தம்புளி கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியினர் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், மருத்துவமனை செல்லவும், மாணவர்கள் பள்ளி,கல்லுாரிக்கு சித்திரங்குடி கிராமம் வழியாக 7 கி.மீ தொலைவில் உள்ள முதுகுளத்துார் செல்கின்றனர். பொந்தம்புளியில் இருந்து சித்திரங்குடி செல்ல சாலை வசதியில்லாததால் 10 அடிக்கு குறைவான தெரு சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் வருவதற்கு கூட சாலை வசதியில்லாததால் நோயாளிகளை ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். இதனால் கிராமமக்கள் சிரமப்படுகின்றனர். பொந்தம்புளி கிராமத்தில் இருந்து சித்திரங்குடி கிராமத்திற்கு செல்வதற்கு கண்மாய்கரை பகுதியில் புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE