ஆர்.எஸ்.மங்கலம் : பிச்சனார்கோட்டையில், தி.மு.க., மக்கள் கிராமசபை கூட்டம் மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் வைரவன் தலைமையில் நடைபெற்றது. முதுகுளத்துார் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., முருகவேல் பேசினார். ஆளும் கட்சியின் மக்கள் விரோத போக்கால் விலைவாசி உயர்ந்துள்ளதாக கட்சியினர் குற்றம் சாட்டினர். கூட்டத்தில் நகர் செயலாளர் புரோஸ்கான், முன்னாள் கவுன்சிலர்கள் தென்றல்ஜலீல், கந்தசாமி, அழகேசன், நிர்வாகிகள் அப்துல்லா, லுாகாஸ், ராசு, ஆரோக்கியம், பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE