ராமேஸ்வரம் : இலங்கை கெடுபிடியால் பாம்பன் மீனவர்களுக்கு மீன்வரத்து இன்றி கரை திரும்பியதால், வருவாய் இழப்பு ஏற்பட்டது.
டிச., முதல் பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இலங்கை கடற்படை வீரர்கள் ரோந்தில் ஈடுபட்டு ராமேஸ்வரம், பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீது கற்கள், காலி மதுபாட்டிலை வீசி தாக்கியும், துப்பாக்கியால் எச்சரித்து விரட்டியடித்தனர். டிச.,14, 15ல் ராமேஸ்வரம், துாத்துக்குடியைச் சேர்ந்த 40 மீனவர்களை கைது செய்த சம்பவம், தமிழக மீனவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.
ஜன.,7 ல் பாம்பனில் இருந்து 95 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், வழக்கம் போல் மீன்வளம் நிறைந்த மன்னார் வளைகுடா கடலின் இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடிக்க முயன்றனர். அப்போது அங்கு 5 படகில் இலங்கை வீரர்கள் தீவிர ரோந்து சுற்றினர். அப்பகுதியில் மீன்பிடிக்க முடியாமல் வேறு இடத்தில் மீன்பிடித்ததில், எதிர்பார்த்த மீன்வரத்து இன்றி நேற்று காலை கரை திரும்பினர். இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இலங்கை வீரர்களின் கெடுபிடி நீடித்தால் இனிவரும் நாளில் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிப்பது சிக்கல் ஏற்படும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE