திருவாடானை : பயிர் இன்சூரன்ஸ் வழங்கக்கோரி திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு மூன்று நாட்களாக நடந்த முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம்தாலுகாவை சேர்ந்த 31 வருவாய் கிராம விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் தொகை வழங்ககோரிஜன.6 முதல் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்நடத்தினர்.
3ம் நாளான நேற்று காலையில் போராட்டம் தொடர்ந்தது. விவசாயிகள் ஒருங்கிணைப்புகுழு சார்பில் 20பேர் கொண்ட குழு ராமநாத புரத்திற்கு சென்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரை சந்தித்தினர். வரும் 11ந் தேதி பயிர்இன்சூரன்ஸ் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதில்விவசாயிகள் கலந்து கொள்ளலாம்.
அக்கூட்டத்தில் முழுமையான இன்சூரன்ஸ் தொகை கிடைக்க வலியுறுத்தப் படும்.ஆகவே போராட்டத்தை வாபஸ் பெறுமாறு கலெக்டர் பேசினார். இக் கருத்தை ஏற்றுக்கொண்ட விவசாயிகள்முற்றுகை போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE