சென்னை:தைப்பூச விழாவுக்கு, அரசு பொது விடுமுறை அறிவித்ததற்காக, பழநி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், முதல்வரை சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.
பேரமைப்பின் கவுரவ தலைவர் 'கந்த விலாஸ்' என்.செல்வகுமார் தலைமையில், பேரமைப்பு நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், நேற்று முதல்வர் பழனிசாமியை சந்தித்தனர்.தைப்பூச திருவிழாவிற்கு, அரசு பொது விடுமுறை அறிவித்ததற்காக, முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். அத்துடன், பழநியை தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE