ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த மாதம் துணிக்கடை மற்றும் மளிகைக்கடைகள் உடைக்கப்பட்டு பொருட்கள், பணம் திருடப்பட்டது.
குற்றப்பிரிவு எஸ்.ஐ., சிவலிங்கபெருமாள் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை தேடிவந்தனர்.ஆர்.எஸ்.மங்கலம் கைகாட்டி விலக்கு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற அழியாதான்மொழியை சேர்ந்த சூசைமாடன் மகன் திலீப்குமாரை 32, விசாரணை செய்ததில், தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது,
அவரிடம் இருந்து 15 அலைபேசிகள், ஏழு ஜோடி காலணிகள், ஒரு லேப்டாப், ஒரு டூ வீலர், ரூ 46 ஆயிரம் ரொக்கத்தை போலீசார் கைப்பற்றி அவரை கைது செய்தனர். விசாரணையில், திருமணமாகாத தனது சகோதரிக்கு திருமணம் செய்ய பணம் இல்லாததால், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE